பெற்றெடுத்த அன்னை நாட்டை
வி(ட்)ற்று விட்டு செல்பவர்கள்
சுற்றங்கள் எல்லாம் சொந்தமண்
பற்று பேசின
யுத்தத்தை கண்டு நாம் பயந்ததில்லை- சிந்தும்
இரத்தத்தைக் கண்டு மருண்டதில்லை
ஏதிலியாய் ஆவோம் என
என்றுமே நினைத்ததில்லை
தாய் மண்ணை தாழ்ந்தது என்றதில்லை
தமிழ் மொழியை இழிவாக நினைத்ததில்லை
காற்றடித்தால் கலைவதற்கும் காததூரம் போனால்
காணாமல் போவதற்கும் காகிதமா எம் தமிழுணர்வு?
எம் மண்ணைப் பற்றி பேசுகையில்
எழுகின்ற உணர்வலைகள்
அடிமனதில் மட்டுமே அழுகின்றோம்
ஆங்கிலேய நாட்டின் அகதிகளாய்
Sunday, December 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment