நாட்குறிப்பேடு தை 16 2005
என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்க்கையின் நிலையாமை குறித்துப் பலர் பலவிதமாகப் பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் அதை இந்த இளம்வயதில் உணர்ந்து கொள்ளக் கூடிய நாள் வரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் நடந்து வந்த பாதையினைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.எத்தனையோ முள் தடங்கள் எல்லாம் தாண்டி இப்போது வசந்தத்தின் வாசலில் இருப்பதாக நான் நினைத்ததில்லை. முள்ளின் நடுவே மலர்ந்திருக்கும் மலரைப் பார்த்து முட்களை மறந்து போயிருக்கிறேன்.சின்ன சின்ன விடயங்களையெல்லாம் இரசித்து வாழ்க்கையில் சினங்களை மறந்திருக்கிறேன். 1996 ம் ஆண்டு. யாழிலிருந்து இடம் பெயர்ந்து கிட்டத்தட்ட அகதியாய் நான் அந்த உடப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்த நேரம். பள்ளியில சேர்ந்த முதல்நாள் நீ பழக்கமானாய். காரணம்; யாழ்ப்பாணத்தமிழ் பேசத் தெரிந்த ஒருத்தி அங்கு நீயே தான். இடைவேளையின் போது வகுப்பே கூடியிருந்து ஒன்றாகச் சாப்பிடும். ஓவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து சாப்பிடுவார்கள். என்னால் மட்டும் முடியவில்லை. அவர்கள் தரும் உணவை உண்ணக்கூடாது.வீட்டில் போடப் பட்ட சட்டம். .நான் மட்டும் தனித்தீவாய் ஒரு மாதம் ஓடியது. வகுப்புத் தொழிகளுடனேயே பேசக் கூச்சமாக இருக்கும்.காரணம் நான் பேசும் தமிழ்.அந்நியப் பட்ட ஒரு சூழலில் எனக்கு அணைவாக இருந்தவள் அவள் ஒருத்தி தான். எத்தனையோ நினைவுகள்.இப்போது மீட்டிப் பார்க்கக் கண்கள் குழமாகின்றன. எங்கள் வகுப்பு ஓரத்தில் வெட்டையாய் இருந்த அந்த நிலப்பகுதியில் பூஞ்செடி வைப்போம் என்று முன் மொழிந்தேன்.மறுப்பின்றி நீ வழி மொழிந்தாய்.மறுநாளே ஆளுக்காள் ரோசா,செவ்வந்தி,செவ்வரத்தை,கனகாம்பரம்,நித்தியகல்யாணி என்று கொண்டுவர அந்த இடமே பூஞ்சோலையானது. இத்தனையையும் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த ஆண் மாணவர் கூட்டம் அன்றிரவே நட்டுவைத்த அத்தனை செடிகளையும் பிடுங்கி எறிந்து விட்டு எதோ பெண்களையே உலகத்திலிருந்து பிடுங்கி எறிந்து விட்டதாக இறுமாப்புக் கொண்டனர்.மறுநாள் காலை பள்ளி வந்து நீ இவற்றை எல்லாம் பார்த்து அழுதது இன்னும் என் கண்களில் நிற்கிறது. இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று ஆத்திரப் பட்ட நாம் அதிபரிடம் புகார் செய்ததும் மறுநாள் அந்த மாணவர்களே மலர்த்தோட்டம் அமைத்தது கண்டு நீ கேலி பேசிச் சிரித்ததும் இப்போது போல் இருக்கிறது. சில நாட்கள் ஓடிய பின் காலையில் பூஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்ற வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. நான் நட்ட ரோசா பூப்பூத்திருந்தது. என்னையறியாமலே, “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” என்ற பாடலைப் பாடியவண்ணம் தண்ணீரை ஊற்றிப் பாத்தி கட்டிக் கொண்டிருந்த நான் ஆளரவம் கேட்டுச் சட்டென்று திரும்பிப் பார்க்க பின்னால் சிறீகாந்தா ஆசிரியர் நமுட்டுச் சிரிப்புடன், “ அம்மணி ரோசாப்பூவை விடப் பாட்டு நல்லா இருக்கு. நீ பாடிப் பாடி தண்ணீர் ஊற்று” என்று கேலியாகச் சொல்லி விட்டு நகர்ந்தார். எனக்கு வெட்கமாகிப் போய் விட்டது. “ அடி! வகுப்பில யாருக்கும் சொல்லாத. சொன்னால் கிண்டல் பண்ணுவாளுக” என்று நான் சொல்லி முடிக்கும் முன்னே நீ வகுப்பு முழுவதற்கும் பறையடித்து விட்டாய். அன்று முழுவதும் உன்னைத் துரத்திக் கொண்டு நான் வர என்னிடமிருந்து தப்பி நீ ஓடியதும், அதன் பின் என்னைக் காணும் பொழுதெல்லாம், ரோசாப்பூ பாடல் பாடிப் பாடித் தோழிகள் வரவேற்பதும் இப்போது நினைக்கும் போது நேற்றுப் போல் இருக்கிறது..ஓவ்வொரு வெள்ளியும் காலையில் சைவமாணவர்களுக்கு சிவபுராணம் ஓதுதல் நடக்கும். உனக்கு அந்த தொல்லையில்லை. வானத்திலிருந்து வையகம் எழுந்த புனித ஆவியே பாடலுடன் இரண்டு செபங்கள் அவ்வளவு தான்.ஆனால் ஏனோ தெரியவில்லை.நீயும் சிவபுராணம் படிக்க வருவாய் எங்களுடன். தொல்லையிலும் பிறவி என்று பாடத்தொடங்கும் போதே எனக்கு சேக்கிழார் மீது எரிச்சல் வரும். ஆனாலும் அவை மகிழ்ச்சியான நாட்கள். நவராத்திரிக் காலத்திலும் காலையில் எழுந்து மாலைகட்டி(மாலை கட்டுவதில் கூட எமக்குள் எத்தனை போட்டி)பனிக்குளிரில் தலைகுளித்து,அப்பப்பா இப்போது நினைத்தாலும் நாடி நாளமெல்லாம் சில்லென்று விறைத்துப் போய் விடுகின்றது. அதை விட நகைச்சுவை தாவணி போடுவது. ஆளாளுக்கு ஒவ்வொரு நிறத்திலே தாவணி அணிந்து கொண்டு ஏதோ அழகிப் போட்டிக்குப் போவது போல் அணிவகுத்து நிற்போம். அதில் கூட நகைச்சுவையாக சொல்வார்கள் ஆசிரியர்கள், “குட்டிகள் எல்லாம் தாவணி போட்டால்தான் வெட்கப்படுதுகள.இல்லையென்றால் இதுகள் எல்லாம் பிசாசுக்கூட்டம்”; என்று. ஏனோ தெரியவில்லை. பெண்களைக் குட்டிகள் என்று சொல்லும் போது எனக்கு எரிச்சலாய் வரும். “குட்டிகள் என்றால் நாங்கள் என்ன நாய்க்குட்டிகளா? இல்லை ஆட்டுக்குட்டிகளா?பெண்கள் என்று சொல்லுங்கோ சேர்” என்று நான் சொல்வேன். நீ மட்டும் அதற்கும் நகைச்சுவையாகஇ “குட்டிகளுக்கு வெட்கப்படத் தெரியாதே சேர்.அதுகளுக்கெல்லாம் ஐந்தறிவு தான்.குமரிகள் வேணுமானால் வெட்கப்படுவாங்க.நாங்கள் குழந்தைகள்.நாங்கள் எப்படி வெட்கப் படுவது” என்று ஆசிரியருக்கு கிண்டல் அடிக்க “ இவளோட பேசி வெல்லமுடியாது”என்று தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு அவர்கள் போவதுகண்டு சிரிப்பாக இருக்கும்.
;நவராத்திரிகாலத்தில் கொலுவுக்கு முன்னால் தேங்காய்ப் பூவினாலும் மாவினாலும் கோலம் போட்டு அழகு படுத்துவோம். இத்தனை செய்தும் அந்த ஆண்மாணவர்கள் எங்களை கடவுளுக்கு மாலை போட விடமாட்டார்கள். “பெண்கள் கட்டிய பூமாலை வேண்டும் ஆனால் பெண்கள் போடக்கூடாது” என்று ஒருத்தி தொடங்க, “அதானே உங்கள் கழுத்திலா போடக் கேட்டோம்.கடவுளுக்குத் தானே போடக் கேட்டோம்” என்று கடிக்க, அத்தனை பெண்களும் கொல்லென்று சிரிக்க பையன்கள் பார்த்து முறைக்க, “ஏண்டா கந்தப்பு முறைக்கிறாய்?” என்று பின்னால் மறைந்திருந்து ஒருத்தி சொல்ல “எவடி அவள் துணிச்சல் இருந்தால் முன்னால் வந்து சொல்” கந்தப்பு தன் வீரத்தைப் பெண்களுக்கு முன் காட்டுவான். “குரைக்கிற நாய் கடிக்காது தானே.” என்று முணுமுணுக்க மீண்டும் ஆண்மாணவர்களுக்கும் பெண்மாணவர்களுக்குமிடையில் அதிகாரப் போட்டி தொடங்கும். ஆனாலும் இத்தனை குறும்புகளுக்கும் கேலிப்பேச்சுகளுக்கும் யாரும் ஆத்திரப் பட்டதோ கோபப்பட்டதோ இல்லை.இத்தனை கேலிப் பேச்சுக்களை ஆரம்பிப்பது நீ என்று ஆண்மாணவர்களுக்குத் தெரியும். அதனால் தான் “டயனா” என்கின்ற உன் பெயரை வைத்து எல்லோரும் “இளவரசி வராடா” என்று கிண்டல் செய்வார்கள்.எங்கள் பள்ளிக்காலத்தைக் கலகலப்பாக்கியவள் நீ என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஓருநாள் பள்ளிவிட்டு வீடு திரும்பும் வழியிலுள்ள பொதுக்கிணற்றில் பைத்தியக்கார கிழவி அம்மணமாய் குளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கிழவிக்கு பைத்தியம் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே அதைப் பார்த்துக் கொல் என்று சிரித்து விட்டேன். கிழவிக்கு வந்ததே கோபம், “ எந்த சிறுக்கி அவள் என்னைப் பார்த்துச் சிரித்தவள். பொட்டைக்கழுதை! குமரிப்பெண்ணா லட்சணமா இல்லாம கெக்கெக்கே சிரிக்கிறாளுகளாம் சிரிப்பு” என்று ஆத்தா தமிழ் அகராதியிலேயே இல்லாத கெட்ட கெட்ட சொற்களால் திட்ட ஆரம்பித்தது.நான் பயத்தில் விறைத்துப் போய் நின்று விட்டேன். ஆனால் இவள் சும்மா இருக்கவில்லை. “ஏன் ஆத்தாக் கிழவி! நீ குமரிப் பொண்ணா லட்சணமா குளிக்கக் கூடாதா? நீ என்ன சிம்ரானா?” என்று ஏகத்துக்கு எகிற, “ஐயோ, எதுவும் சொல்லாதடி.பேசாம இருடி” நான் இவளை அடக்கமுயல இவள் பேச்சை நிறுத்தி விட்டு ஆத்தாவுக்கு நெளிப்புக் காட்டினாள். ஆத்தாவுக்கு வெறியே வந்து விட்டது.கல் எடுத்துக் கொண்டு எங்களைத் துரத்த ஆரம்பித்து விட்டது. நாங்கள் நாய் படாத பாடு பட்டு ஓட்டம் பிடித்தோம். வீட்டுப் படலையைத் திறந்து உள்ளே நுழையும் வரை என்னால் பதட்டத்தைத் தணிக்க முடியவில்லை.இன்றும் கூட அதை நினைத்து நான் சிரிப்பதுண்டு.
இப்படியெல்லாம் எங்கள் பள்ளிக்காலத்தை வசந்தமாக்கிய நீ இன்று வாய் மூடி எங்களை விட்டுப் போனதென்ன? உனது கடவுள் போதாதென்று எனது கடவுளையும் கும்பிட்டாயே. இருவரில் ஒருவர் கூடவா உன்னைக் காக்க முன் வரவில்லை?.எங்கள் கோவில் திருவிழாவுக்கு நானே போவதில்லை.ஆனால் பட்டை அடித்துக் கொண்டு நீ கிளம்பி விடுவாய்.இன்றும் கூட என்னால் நம்பமுடியவில்லை.உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நீ இருந்து கொண்டுதான் இருக்கிறாய் என்றே நம்புகிறேன். இன்று காலை தொலைபேசியில் வந்த அந்தச் செய்தி பொய்யாகியிருக்கக் கூடாதா? என ஏங்குகிறேன். இத்தனை நாளாய் உடப்பில் இருந்த நீ எதற்காக முல்லைத்தீவுக்குப் போனாய்? உன்னுடன் உன் அம்மா அக்கா சாந்தமலர் அத்தனையும் போய் விட அந்த அதிர்ச்சி தாங்கமுடியாமல் உன் அப்பா மாரடைப்பால் உயிர்விட்டாரே அது உனக்குத் தெரியுமா? தப்பிப் பிழைத்த உன் தம்பிக்கு நீ தருவது இந்தத் துயரத்தைத் தானா? எனக்கு மட்டும் கால ஓட்டத்தை பின்னோக்கிச் செல்லச் செய்யும் வலு இருந்தால் இத்தனை இழப்புகளைத் தவிர்த்திருக்கலாமே. ஓன்று மட்டும் புரிகிறது. நீர்க்குமிழி போன்றதே வாழ்க்கை.இதில் எதுவுமே நிலையற்றது.ஜென்மங்கள் மீதெனக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் சொல்கிறேன் மீண்டும் ஒரு பிறப்பெடுத்தால் ஈழத்தில் தமிழனாய் பிறந்து விடாதே. அழுவதற்கும் அலைவதற்கும் அடிபட்டு அழிவதற்கும் அநாதைகளாய்ப் போவதற்கு அடிமையாய் அகதியாய் வெளிநாடுகளில் தஞ்சம் புகுவதற்கும் தஞ்சம் புகுந்த நாட்டில் சொந்த உறவுகளை வெட்டிச் சாய்ப்பதற்குமே பிறந்த ஈனர்கள் நாங்கள். இனியொருமுறை ஈழத்தமிழனாய்ப் பிறக்காதே.
Monday, December 18, 2006
Sunday, December 17, 2006
கடற்கோள் நினைவு வணக்கம்.
2004ம் ஆண்டு மார்கழித்திங்கள் எம் ஈழமண்ணில் கடலன்னை நிகழ்த்திய கோரத் தாண்டவத்திற்கு இரையாகப் போன எம் மண்ணின் மைந்தர்களுக்காய் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி என் மனதில் அந்த நாள் விதைத்துப் போன மாறாத வடுவை வரிகளில் கொட்டியிருக்கிறேன்.
நீண்ட இரவுகளை எமக்களித்து
நீங்கி நீங்கள் போய் விட்டீர்கள்
மாண்டவர் மீண்டு வருவார் என்று
மனதிலே ஏக்கம் கொண்டு
காத்திருக்கிறோம் எம்
கண்மணிகளே!
துளிரும் பருவத்தில் துடைத்தெடுக்கப் பட்டது
உங்கள் வாழ்வு மட்டுமல்ல
எங்கள் வருங்காலமும் தான்
காத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டுக்
கடலோடு போனவரை
வழி மேல் விழிவைத்துப்
பார்த்திருக்கிறாள் எம் மண்ணின்
பருவ மங்கை
அடித்த அலைவழியே அவன் உடலம்
திரும்பியது தெரியாமல்
கந்தகக் காற்று வீசும் மண்ணிலே
செந்தளிர்க் கால் பதித்து நடந்த
எம் குஞ்சுகள்
செந்தணலாகியுன் சீற்றத்தில் போனபின்
நிந்தகம் செய்வமோ நினைக்க மறுப்பமோ
சொல்லு கடலம்மா
சோதனைகள் ஏனம்மா?
பள்ளிப் பருவத்தில்
துள்ளித் திரிந்த என் தோழி
முல்லைக் கடலினிலே
மூழ்கித்தான் போயினளே!
அழுது முடிக்க முடியவில்லை
அருகிருக்க வழியும் இல்லை
நாட்குறிப்புகளிலே
நாளும் அழுகின்றோம்
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சூரியக் கதிரிலும்
செத்துப் பிழைத்த
எம் குழந்தைகளை
கொத்தும் உன் கொலைக் கரத்தால்
குதறி நீ போட்டதென்ன?
பாரம்மா!
எம் மண்ணைப்
பாலைவனமாய்க் கிடக்கிறது.
கனவு சுமந்த எம் துளிர்களின்
கவிதைகள் எல்லாம்
கானலாய்ப் போனது
துளிர்களைப் பிடுங்கி நீ
துரோகம் இழைத்து விட்டாய்
ஊர் மனைகளில் நீ
ஓலவிதை விதைத்து விட்டாய்
ஊரோடித்திரிந்தவரை
ஊமையாய் ஆக்கிவிட்டாய்
அம்மி மிதித்த மங்கையரை
விம்மி அழவைத்து விட்டாய்.
புலம்பெயர் உறவுகளைப்
புலம்ப நீ வைத்து விட்டாய்
என்ன செய்வது?
மாண்ட உங்களுக்காய்
மௌனமாய் வேண்டிவிட்டு
மீண்டும் இயந்திரமாய்
வேலையும் வீடுமாய்
வாழும் நாமெல்லாம்
ஆங்கிலேய நாடுகளில் உங்களுக்காய்
அழுகின்ற அகதி உறவுகள்.
நீண்ட இரவுகளை எமக்களித்து
நீங்கி நீங்கள் போய் விட்டீர்கள்
மாண்டவர் மீண்டு வருவார் என்று
மனதிலே ஏக்கம் கொண்டு
காத்திருக்கிறோம் எம்
கண்மணிகளே!
துளிரும் பருவத்தில் துடைத்தெடுக்கப் பட்டது
உங்கள் வாழ்வு மட்டுமல்ல
எங்கள் வருங்காலமும் தான்
காத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டுக்
கடலோடு போனவரை
வழி மேல் விழிவைத்துப்
பார்த்திருக்கிறாள் எம் மண்ணின்
பருவ மங்கை
அடித்த அலைவழியே அவன் உடலம்
திரும்பியது தெரியாமல்
கந்தகக் காற்று வீசும் மண்ணிலே
செந்தளிர்க் கால் பதித்து நடந்த
எம் குஞ்சுகள்
செந்தணலாகியுன் சீற்றத்தில் போனபின்
நிந்தகம் செய்வமோ நினைக்க மறுப்பமோ
சொல்லு கடலம்மா
சோதனைகள் ஏனம்மா?
பள்ளிப் பருவத்தில்
துள்ளித் திரிந்த என் தோழி
முல்லைக் கடலினிலே
மூழ்கித்தான் போயினளே!
அழுது முடிக்க முடியவில்லை
அருகிருக்க வழியும் இல்லை
நாட்குறிப்புகளிலே
நாளும் அழுகின்றோம்
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சூரியக் கதிரிலும்
செத்துப் பிழைத்த
எம் குழந்தைகளை
கொத்தும் உன் கொலைக் கரத்தால்
குதறி நீ போட்டதென்ன?
பாரம்மா!
எம் மண்ணைப்
பாலைவனமாய்க் கிடக்கிறது.
கனவு சுமந்த எம் துளிர்களின்
கவிதைகள் எல்லாம்
கானலாய்ப் போனது
துளிர்களைப் பிடுங்கி நீ
துரோகம் இழைத்து விட்டாய்
ஊர் மனைகளில் நீ
ஓலவிதை விதைத்து விட்டாய்
ஊரோடித்திரிந்தவரை
ஊமையாய் ஆக்கிவிட்டாய்
அம்மி மிதித்த மங்கையரை
விம்மி அழவைத்து விட்டாய்.
புலம்பெயர் உறவுகளைப்
புலம்ப நீ வைத்து விட்டாய்
என்ன செய்வது?
மாண்ட உங்களுக்காய்
மௌனமாய் வேண்டிவிட்டு
மீண்டும் இயந்திரமாய்
வேலையும் வீடுமாய்
வாழும் நாமெல்லாம்
ஆங்கிலேய நாடுகளில் உங்களுக்காய்
அழுகின்ற அகதி உறவுகள்.
அகதிகள்
பெற்றெடுத்த அன்னை நாட்டை
வி(ட்)ற்று விட்டு செல்பவர்கள்
சுற்றங்கள் எல்லாம் சொந்தமண்
பற்று பேசின
யுத்தத்தை கண்டு நாம் பயந்ததில்லை- சிந்தும்
இரத்தத்தைக் கண்டு மருண்டதில்லை
ஏதிலியாய் ஆவோம் என
என்றுமே நினைத்ததில்லை
தாய் மண்ணை தாழ்ந்தது என்றதில்லை
தமிழ் மொழியை இழிவாக நினைத்ததில்லை
காற்றடித்தால் கலைவதற்கும் காததூரம் போனால்
காணாமல் போவதற்கும் காகிதமா எம் தமிழுணர்வு?
எம் மண்ணைப் பற்றி பேசுகையில்
எழுகின்ற உணர்வலைகள்
அடிமனதில் மட்டுமே அழுகின்றோம்
ஆங்கிலேய நாட்டின் அகதிகளாய்
வி(ட்)ற்று விட்டு செல்பவர்கள்
சுற்றங்கள் எல்லாம் சொந்தமண்
பற்று பேசின
யுத்தத்தை கண்டு நாம் பயந்ததில்லை- சிந்தும்
இரத்தத்தைக் கண்டு மருண்டதில்லை
ஏதிலியாய் ஆவோம் என
என்றுமே நினைத்ததில்லை
தாய் மண்ணை தாழ்ந்தது என்றதில்லை
தமிழ் மொழியை இழிவாக நினைத்ததில்லை
காற்றடித்தால் கலைவதற்கும் காததூரம் போனால்
காணாமல் போவதற்கும் காகிதமா எம் தமிழுணர்வு?
எம் மண்ணைப் பற்றி பேசுகையில்
எழுகின்ற உணர்வலைகள்
அடிமனதில் மட்டுமே அழுகின்றோம்
ஆங்கிலேய நாட்டின் அகதிகளாய்
Tuesday, December 05, 2006
உடப்பு- சில தகவல்கள்
உடப்பில் வாழும் தமிழர்கள் இந்திய வம்சாவழித்தமிழர்கள் என்றுகருதப்பட்டாலும் இவர்கள் மலையகத்தமிழர்களைப் போன்று அடிமைகளாகவோகூலிகளாகவோ நடத்தப்படவில்லை. 1970_1985 காலப் பகுதிகளில் உடப்பு பணவசதிகொண்ட ஊராகக் கருதப்பட்டது.இத்தனை வசதிகள் இருந்தபோதும் இவ்வூரவர்கள்கல்வியில் அதிகம் நாட்டம் செலுத்தவில்லை. பொதுவாக பெண்கள் அதிகமாகப்படித்திருக்கவில்லை.இன்றும் கூட அந்த ஊரிலிருந்து ஒரு மருத்துவரோபொறியிலாளரோ கணித விஞ்ஞானத்துறைகளில் இளமானிப் பட்டம் பெற்றவர்களோஉருவாகவில்லை. பெண்கள் மிதிவண்டி ஓடினால் அதை அதிசயமாகப் பார்க்கும்போக்கு இன்றும் அங்கு இருக்கின்றது.1990 வரை இந்த ஊரை மேலைத்தேய நாகரீகம்தாக்கவில்லை. பெண்கள் சேலை,பாவாடை, தாவணி அணிவதையே காணக்கூடியதாகஇருக்கும். அதன் பின் ஏற்பட்ட திடீர்மாற்றங்களால் கொழும்புப் பகுதியின் செல்வாக்கால் உடை விடயத்தில் மாற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் கோவில் திருவிழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் தங்கள் பண்பாட்டு உடைகளை அணிவது இவர்கள் வழக்கம்.
இந்த ஊரில் வாழும் பெண்கள் அதிகம் படித்திருக்காதமையால் தனித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர். கணவனையோ பெற்றோரையோ தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலை இவர்களுக்கு .இவ்வூரில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை அதிகம். அதனால் இரண்டுக்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்ட ஆண்களை இங்கு காணக்கூடியதாய் இருக்கும். 1990 ல் தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்பட்ட போரினால் இவர்கள் முல்லைத்தீவு மன்னார் போன்ற பகுதிகளுக்கு சென்று தொழில் செய்யும் வாய்ப்பினை இழந்தனர். அதனால் வறுமை இவர்களைச் சூழ்ந்து கொண்டது.மீன்பிடி தவிர வேறு தொழில் தெரியாத இவர்களுக்கு சாராயம் காய்ச்சுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதனால் பெண்களே சாராயம் காய்ச்சி விற்பது குடிசைக் கைத்தொழிலாகிப் போனது. இது போன்ற கள்ளச்சாராயத்தின் தீமை தெரியாமல் அதைக் குடித்து விட்டு இளம் வயதிலேயே ஈரல் கருகிச் சாவது இங்குள்ள ஆண்களின் தலைவிதி ஆனது.
இவர்கள் வேறு ஊரவர்களைத் திருமணம் செய்வதில்லை. பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்காக சீதனம் கேட்கும் வழக்கம் இந்த ஊரில் மிக அரிதான விடயம். மொத்தக்கிராமமே மீனவர்கள் என்பதால் சாதிபற்றி இவர்களுக்கு அதிகம் தெரியாது. இந்தியத் திரைப்படங்களில் தாக்கம் இந்த ஊரில் அதிகம் எனலாம். வீட்டில் ஒரு வேளை உணவிற்கு சிரமப்பட்டாலும் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும்.ஈழப் போராட்டம் பற்றிய அறிவு இங்குள்ள இளம் தலைமுறையினருக்கு இல்லை. நீர்கொழும்பு,முந்தல்,ஆனைவிழுந்தான்,புளிச்சான்குளம் போன்ற கிராம மக்கள் இலங்கைஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றகாலப்பகுதியில் இந்து மதத்திலிருந்து கிறீஸ்தவர்களாக மாறி பிற்காலத்தில் தமிழ் மறந்து சிங்களம் பேசுபவர்களாக மாறிய பின்னும் இவ்வூரவர்கள் இன்னும் தமிழ் பேசுவதற்குக் காரணம் அவர்களின் தீவிர மத நம்பிக்கை. பார்ப்பன ஐயர்மாரின் தாக்கம் சமீபகாலமாக இங்கு அதிகரித்துள்ளது எனலாம். இருந்தாலும் இங்குள்ள கோவிலில் மரபுவழியான வழிபாடே அதிகமாக நடைபெறுகிறது. சிலவேளைகளில் இவ்வகையான வழிபாடு வெறித்தனமானதாகவும் வன்முறை நிறைந்ததாகவும் எனக்கு தோன்றியது உண்டு. பெண்தெய்வமான காளிக்கு அதிகம் அச்சப் படுகிறார்கள்.ஆண்டின் குறித்த ஒருகாலப்பகுதியில் காளி தெய்வத்திற்கு ஆடு பலியாகக் கொடுக்கிறார்கள்.அப்படிகொடுக்காவிட்டால் ஊருக்கு தீமை உண்டாகும் என்ற அச்சம் இவர்களிடம் அதிகம் உண்டு. இது போல் தீ மிதித்தல், அலகு குத்திக் கொள்ளல், நெஞ்சைக்கத்தியால் (ஆண்கள்) கீறிக் கொள்ளல் போன்ற பயங்கரமான வழிபாடுகள் இங்குஅதிகம். இவையெல்லாம் முட்டாள் தனமான பிற்போக்கானநம்பிக்கை என்று சொன்னால் இவ்வூரைச் சேர்ந்த படித்த ஆசிரியர்களே தங்கள் தெய்வத்தை அவமதிப்பதாக எண்ணிக் கோபப் படுகிறார்கள்.
உடப்பு என்று இந்த ஊருக்கு பெயர் வரக்காரணம் என்று கேட்டால் இருவேறுவிதமான கதைகளைச் சொல்கிறார்கள்.ஒன்று இவர்கள் இந்த ஊருக்கு வந்த போது இவ்வூர் உடை முள் காடாக இருந்ததாம்.இரண்டு மாரிகாலங்களில் கடல் நீரேரியில் நீர் மட்டம்அதிகரித்து ஊருக்குள் தண்ணீர் வரும் போது இவர்கள் நீரேரிக்கும் இந்துமாகடலுக்கும் வாய்க்கால் வெட்டி அந்த நீரை கடலுக்குள்அனுப்புகிறார்கள். அப்போது நிலத்தை உடைத்து வாய்க்கால் கட்டுவதால்"உடைப்பு" என்ற சொல் கால ஓட்டத்தில் உடப்பாக மாறியிருக்கலாம்.
இவ்வூரில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. இரண்டிலுமே க.பொ.த உயர்தர(தரம்12_13)கணித விஞ்ஞானப் பிரிவுகள் இல்லை.சாதாரண தரத்தில் கற்பிக்க(தரம் 11)ஆங்கில விஞ்ஞான கணித ஆசிரியர்கள் அதிகம் இல்லை.இது குறித்து மாவட்டகல்வித்திணைக்களத்துடன் போராடி ஆசிரியர்களை பெற்றுக் கொள்ளும் அக்கறை இங்குள்ள இளைஞர்களுக்கு இல்லை. ஓரு சில படித்த இளைஞர்கள் இலவசவகுப்புக்களை நடாத்தி கல்வி தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தமுயல்கின்ற போதிலும் அது மக்களால் அதிகளவில வரவேற்கப்படவில்லை. தொடர்ந்தும் வடபகுதி யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து ஆசிரியர்களும் மருத்துவர்களும் அரசினால் இங்கு நியமனம் செய்யப் படுகின்ற போதிலும் அவர்கள் சிறிதளவு காலமே இங்கு தங்குகிறார்கள். காரணம்மருத்துவ நிபுணர் படிப்போ அல்லது முதுமானி முனைவர் படிப்போ படிப்பதற்கு இங்கு பல்கலைகழக வசதி இல்லை. போக்குவரத்து வசதியும் மிகக் குறைவு. சரியானசாலை பெருந்தெரு வசதி இவ்வூருக்கு இல்லை.
1980களிலிருந்து ஒரே ஒரு யாழைச் சேர்ந்த மருத்துவர் இவ்வூரிலேயே தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இங்குள்ள அதிக வசதிகளற்ற கிராமிய மருத்துவமனையில் இவர் தொடர்ந்து பணிபுரிவதால் அவர் ஓய்வுபெற்றபின்னரும் கூட மக்கள் அவரை விடுவதாக இல்லை."கைராசியான மருத்துவர்"என்று அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள இவர்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதை மிக மிக அதிகம். தாங்கள் பிடிக்கும் மீனை இவருக்கு கொடுப்பதும் மருத்துவருக்கு எழுந்து நின்று மரியாதை கொடுப்பதும் வயதில் முதியவர்கள் கூட இவரை ஐயா என்றழைப்பதையும் பார்க்கும் போது தமிழ் நாட்டில் பண்ணையார் நாட்டாமை போன்றவர்களுக்கு அடிமைகளாக நடப்பவர்களை போல் தோன்றும். இது போல் படித்த பிற ஊரைச் சேர்ந்தவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை மிகஅதிகமோ அல்லது அடிமைத்தனமோ என எண்ணத் தோன்றும்.
இவ்வூரவர்கள் வீட்டையும் முற்றத்தையும் மிகத் தூய்மையாக வைத்துக் கொண்ட போதும் வீதிகளில் காயவிடுகின்ற கருவாடும் மீன் கழிவுகளாலும் உண்டாகின்ற ஈபெருக்கத்தினால் அடிக்கடி வாந்திபேதி, வயிற்றோட்டம்,காய்ச்சல் போன்றன ஏற்படுகின்றன.இது குறித்து கிராமிய மருத்துவமனை விழிப்பாக இருப்பதாலும் மருந்து வசதிகள் தாராளமாய்க் கிடைப்பதாலும் பெரிதாக இறப்புக்கள் ஏற்படுவதில்லை. கிராமிய மருத்துவ மனையினால் முன்னெடுக்கப் பட்ட குடும்பக்கட்டுப் பாட்டுத்திட்டம் இங்கு வெற்றியளித்திருக்கிறது என்றே கூறவேண்டும். ஏனெனில் இந்த தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களில் இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பார்ப்பது மிக அரிதாகவே உள்ளது.
இவ்வூரை அடிக்கடி தாக்கும் இன்னொரு ஆபத்து அம்மை,சின்னம்மை,கொப்புளிப்பான் போன்ற வைரசுநோய்கள். இதற்கு அவ்வூரின் காலநிலை மாற்றமும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போவதுமே காரணம் என மருத்துவர்கள் நம்பினாலும் இவ்வூரவர்கள் அதைச் சாமி குற்றமாகக் கொள்கிறார்கள். இந்நோய் ஏற்பட்டவர்கள் கோவில்களில்தங்கியிருந்து நோய் குணமடைந்த பின் அம்மனைக் குளிரவைக்க ஒருவகை கஞ்சியை அம்மனுக்கு படைத்து அதன் பின்னரே வீடு செல்கிறார்கள்.இது போலவே அம்மனை மனம் குளிர வைக்க பெண்கள் ஆண்டின் ஒருகாலப்பகுதியில்(எந்த திங்கள் என்று சரியாக நினைவில்இல்லை)முளைப்பா(வேறுபட்ட தானியங்களை ஒரு சாடியில் வளர்த்தல்) பதியம் போட்டு அவை வளர்ந்ததும் இறுதி நாளில் அதனைக் கடலில் போட்டுக்கரைப்பர்.அந்த இறுதி நாளில் இளம் பெண்கள் ஒரே மாதிரி சேலை அணிந்து கடற்கரையில் கும்மி கொட்டுவர்.இதனை வேடிக்கை பார்க்க ஆண்கள் வருவார்கள்.இந்நிகழ்வினால் அம்மனின் மனம் குளிர்வடைந்து நல்ல கணவனை அந்தப் பெண்கள் பெற்றுக் கொள்வார்கள் என்று அவ்வூரவர்கள் காரணம் கூறினாலும் இது கூட ஒருவகைச் சுயம்வரமோ என்று எனக்கு எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் இந்நிகழ்விலேயே அதிகமான ஆண்கள் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து கொள்கிறார்கள். பெண்களும்இந்நிகழ்வுக்கு செல்லும் போது வழக்கத்தை விட அதிகமாக நகையணிந்து பட்டு உடுத்தி ஒப்பனை செய்து கொள்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது கூட ஒரு பெண் பார்க்கும் படலம் தான்.
இங்குள்ள பெண்களுக்கு நகைகள் மீதும் உடைகள் மீதும் அதிக ஆசை.திருவிழாக்காலங்களில் கடன் பட்டேனும் உடைகளும் நகைகளும் வாங்கிவிடுவார்கள். சேமிப்பு பழக்கம் இவர்களிடம் இல்லாத ஒன்று. பணம் கிடைக்கும்போது அளவுக்கு மீறி ஆடம்பரமாகச் செலவழிப்பதும் பணம் இல்லாத போது நகைகளைஅடைவுக்கு வைத்தோ விற்றோ பணம் எடுப்பதும் இவர்கள் வழக்கம். வங்கியில்பணத்தை வைப்புச் செய்பவர்களை விரல்விட்டு எண்ணலாம்.மாதத்தில் ஒரு தடவையேனும் திரையரங்குகளுக்கு குடும்பமாகச் சென்று படம் பார்ப்பது இவர்கள் வழக்கம். இதற்காக பலர் சிலாபம் நகரிற்கு பேரூந்தில் சென்று படம் பார்ப்பார்கள்.
இங்குள்ள அரசியல் தமிழகத்து அரசியலைப் போன்றது. இவ்வூரைச் சேர்ந்தவர்கள் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளிற்கே ஆதரவு கொடுக்கிறார்கள்.இதனால் தொண்டர்களுக்கிடையே அடிதடி மோதல்களைத் தேர்தல் காலத்தில் காணக்கூடியதாய் இருக்கும்.இவ்வூரில் களவு கொலை போன்ற குற்றங்கள் நடப்பது இல்லை.ஆனால் தற்கொலை வீதம் இங்கு அதிகம் எனலாம். அதுவும் காதல் தோல்வியாலும் கணவன் மாமியார் கொடுமையினாலும் தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் அதிகம். ஆண்கள் குடித்து விட்டு மனைவியரை அடிப்பது பார்க்க கொடுமையாக இருக்கும். படிப்பறிவு இல்லாத காரணத்தால் இப்படியான வேறு பெண்ணை நாடிச்செல்லும் ஆண்களையும் கொடுமைப் படுத்தும் ஆண்களையும் சட்டத்தின்பிடியில் நிறுத்துவது இவர்களால் முடியாத செயல்.ஒரு சில பெண்கள் தண்டிப்பதாக நினைத்துக் கொண்டு கணவரைக் கத்தியால் வெட்டியகொடுமைகளைக் கேள்விப் பட்டதுண்டு. இவர்களின் இந்த முடிவினால் பாதிக்கப்படப் போகும் பிள்ளைகளை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.படிப்பறிவு இல்லாதமையால் உண்டான தன்னம்பிக்கையின்மையும்அவசரத்தில் எடுக்கும் முட்டாள் தனமான முடிவுகளுமே இவர்களின் இந்த நிலைக்கு காரணம். இந்நிலை மாறவேண்டுமானால் ஒரே வழி பெண்கள் படிக்கவேண்டும். ஆனால் "பெட்டை கழுதைக்கு படிப்பு என்னாத்திற்கு?கல்யாணம் கட்டினமா பிள்ளை பெத்தமா என்று இல்லாமல்" என்று கிராமத்துக் கிழவிகளே சொல்லும் போது எப்படி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது? தாங்கள் பிறந்ததன்நோக்கமே திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதுதான் என்று எனது தலைமுறைப் பெண்களே நினைப்பது வேதனை.இவற்றிலிருந்து விடுபட்டால் மட்டுமே இந்த ஊருக்கு விடுதலை. இவர்களுக்கு இப்போது வேண்டியது இனவிடுதலைஅல்ல.சமூக விடுதலை.
இந்த ஊரில் வாழும் பெண்கள் அதிகம் படித்திருக்காதமையால் தனித்து வாழ முடியாத நிலையில் உள்ளனர். கணவனையோ பெற்றோரையோ தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலை இவர்களுக்கு .இவ்வூரில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை அதிகம். அதனால் இரண்டுக்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்ட ஆண்களை இங்கு காணக்கூடியதாய் இருக்கும். 1990 ல் தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்பட்ட போரினால் இவர்கள் முல்லைத்தீவு மன்னார் போன்ற பகுதிகளுக்கு சென்று தொழில் செய்யும் வாய்ப்பினை இழந்தனர். அதனால் வறுமை இவர்களைச் சூழ்ந்து கொண்டது.மீன்பிடி தவிர வேறு தொழில் தெரியாத இவர்களுக்கு சாராயம் காய்ச்சுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதனால் பெண்களே சாராயம் காய்ச்சி விற்பது குடிசைக் கைத்தொழிலாகிப் போனது. இது போன்ற கள்ளச்சாராயத்தின் தீமை தெரியாமல் அதைக் குடித்து விட்டு இளம் வயதிலேயே ஈரல் கருகிச் சாவது இங்குள்ள ஆண்களின் தலைவிதி ஆனது.
இவர்கள் வேறு ஊரவர்களைத் திருமணம் செய்வதில்லை. பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்காக சீதனம் கேட்கும் வழக்கம் இந்த ஊரில் மிக அரிதான விடயம். மொத்தக்கிராமமே மீனவர்கள் என்பதால் சாதிபற்றி இவர்களுக்கு அதிகம் தெரியாது. இந்தியத் திரைப்படங்களில் தாக்கம் இந்த ஊரில் அதிகம் எனலாம். வீட்டில் ஒரு வேளை உணவிற்கு சிரமப்பட்டாலும் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும்.ஈழப் போராட்டம் பற்றிய அறிவு இங்குள்ள இளம் தலைமுறையினருக்கு இல்லை. நீர்கொழும்பு,முந்தல்,ஆனைவிழுந்தான்,புளிச்சான்குளம் போன்ற கிராம மக்கள் இலங்கைஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றகாலப்பகுதியில் இந்து மதத்திலிருந்து கிறீஸ்தவர்களாக மாறி பிற்காலத்தில் தமிழ் மறந்து சிங்களம் பேசுபவர்களாக மாறிய பின்னும் இவ்வூரவர்கள் இன்னும் தமிழ் பேசுவதற்குக் காரணம் அவர்களின் தீவிர மத நம்பிக்கை. பார்ப்பன ஐயர்மாரின் தாக்கம் சமீபகாலமாக இங்கு அதிகரித்துள்ளது எனலாம். இருந்தாலும் இங்குள்ள கோவிலில் மரபுவழியான வழிபாடே அதிகமாக நடைபெறுகிறது. சிலவேளைகளில் இவ்வகையான வழிபாடு வெறித்தனமானதாகவும் வன்முறை நிறைந்ததாகவும் எனக்கு தோன்றியது உண்டு. பெண்தெய்வமான காளிக்கு அதிகம் அச்சப் படுகிறார்கள்.ஆண்டின் குறித்த ஒருகாலப்பகுதியில் காளி தெய்வத்திற்கு ஆடு பலியாகக் கொடுக்கிறார்கள்.அப்படிகொடுக்காவிட்டால் ஊருக்கு தீமை உண்டாகும் என்ற அச்சம் இவர்களிடம் அதிகம் உண்டு. இது போல் தீ மிதித்தல், அலகு குத்திக் கொள்ளல், நெஞ்சைக்கத்தியால் (ஆண்கள்) கீறிக் கொள்ளல் போன்ற பயங்கரமான வழிபாடுகள் இங்குஅதிகம். இவையெல்லாம் முட்டாள் தனமான பிற்போக்கானநம்பிக்கை என்று சொன்னால் இவ்வூரைச் சேர்ந்த படித்த ஆசிரியர்களே தங்கள் தெய்வத்தை அவமதிப்பதாக எண்ணிக் கோபப் படுகிறார்கள்.
உடப்பு என்று இந்த ஊருக்கு பெயர் வரக்காரணம் என்று கேட்டால் இருவேறுவிதமான கதைகளைச் சொல்கிறார்கள்.ஒன்று இவர்கள் இந்த ஊருக்கு வந்த போது இவ்வூர் உடை முள் காடாக இருந்ததாம்.இரண்டு மாரிகாலங்களில் கடல் நீரேரியில் நீர் மட்டம்அதிகரித்து ஊருக்குள் தண்ணீர் வரும் போது இவர்கள் நீரேரிக்கும் இந்துமாகடலுக்கும் வாய்க்கால் வெட்டி அந்த நீரை கடலுக்குள்அனுப்புகிறார்கள். அப்போது நிலத்தை உடைத்து வாய்க்கால் கட்டுவதால்"உடைப்பு" என்ற சொல் கால ஓட்டத்தில் உடப்பாக மாறியிருக்கலாம்.
இவ்வூரில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. இரண்டிலுமே க.பொ.த உயர்தர(தரம்12_13)கணித விஞ்ஞானப் பிரிவுகள் இல்லை.சாதாரண தரத்தில் கற்பிக்க(தரம் 11)ஆங்கில விஞ்ஞான கணித ஆசிரியர்கள் அதிகம் இல்லை.இது குறித்து மாவட்டகல்வித்திணைக்களத்துடன் போராடி ஆசிரியர்களை பெற்றுக் கொள்ளும் அக்கறை இங்குள்ள இளைஞர்களுக்கு இல்லை. ஓரு சில படித்த இளைஞர்கள் இலவசவகுப்புக்களை நடாத்தி கல்வி தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தமுயல்கின்ற போதிலும் அது மக்களால் அதிகளவில வரவேற்கப்படவில்லை. தொடர்ந்தும் வடபகுதி யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து ஆசிரியர்களும் மருத்துவர்களும் அரசினால் இங்கு நியமனம் செய்யப் படுகின்ற போதிலும் அவர்கள் சிறிதளவு காலமே இங்கு தங்குகிறார்கள். காரணம்மருத்துவ நிபுணர் படிப்போ அல்லது முதுமானி முனைவர் படிப்போ படிப்பதற்கு இங்கு பல்கலைகழக வசதி இல்லை. போக்குவரத்து வசதியும் மிகக் குறைவு. சரியானசாலை பெருந்தெரு வசதி இவ்வூருக்கு இல்லை.
1980களிலிருந்து ஒரே ஒரு யாழைச் சேர்ந்த மருத்துவர் இவ்வூரிலேயே தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இங்குள்ள அதிக வசதிகளற்ற கிராமிய மருத்துவமனையில் இவர் தொடர்ந்து பணிபுரிவதால் அவர் ஓய்வுபெற்றபின்னரும் கூட மக்கள் அவரை விடுவதாக இல்லை."கைராசியான மருத்துவர்"என்று அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள இவர்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதை மிக மிக அதிகம். தாங்கள் பிடிக்கும் மீனை இவருக்கு கொடுப்பதும் மருத்துவருக்கு எழுந்து நின்று மரியாதை கொடுப்பதும் வயதில் முதியவர்கள் கூட இவரை ஐயா என்றழைப்பதையும் பார்க்கும் போது தமிழ் நாட்டில் பண்ணையார் நாட்டாமை போன்றவர்களுக்கு அடிமைகளாக நடப்பவர்களை போல் தோன்றும். இது போல் படித்த பிற ஊரைச் சேர்ந்தவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை மிகஅதிகமோ அல்லது அடிமைத்தனமோ என எண்ணத் தோன்றும்.
இவ்வூரவர்கள் வீட்டையும் முற்றத்தையும் மிகத் தூய்மையாக வைத்துக் கொண்ட போதும் வீதிகளில் காயவிடுகின்ற கருவாடும் மீன் கழிவுகளாலும் உண்டாகின்ற ஈபெருக்கத்தினால் அடிக்கடி வாந்திபேதி, வயிற்றோட்டம்,காய்ச்சல் போன்றன ஏற்படுகின்றன.இது குறித்து கிராமிய மருத்துவமனை விழிப்பாக இருப்பதாலும் மருந்து வசதிகள் தாராளமாய்க் கிடைப்பதாலும் பெரிதாக இறப்புக்கள் ஏற்படுவதில்லை. கிராமிய மருத்துவ மனையினால் முன்னெடுக்கப் பட்ட குடும்பக்கட்டுப் பாட்டுத்திட்டம் இங்கு வெற்றியளித்திருக்கிறது என்றே கூறவேண்டும். ஏனெனில் இந்த தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களில் இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பார்ப்பது மிக அரிதாகவே உள்ளது.
இவ்வூரை அடிக்கடி தாக்கும் இன்னொரு ஆபத்து அம்மை,சின்னம்மை,கொப்புளிப்பான் போன்ற வைரசுநோய்கள். இதற்கு அவ்வூரின் காலநிலை மாற்றமும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போவதுமே காரணம் என மருத்துவர்கள் நம்பினாலும் இவ்வூரவர்கள் அதைச் சாமி குற்றமாகக் கொள்கிறார்கள். இந்நோய் ஏற்பட்டவர்கள் கோவில்களில்தங்கியிருந்து நோய் குணமடைந்த பின் அம்மனைக் குளிரவைக்க ஒருவகை கஞ்சியை அம்மனுக்கு படைத்து அதன் பின்னரே வீடு செல்கிறார்கள்.இது போலவே அம்மனை மனம் குளிர வைக்க பெண்கள் ஆண்டின் ஒருகாலப்பகுதியில்(எந்த திங்கள் என்று சரியாக நினைவில்இல்லை)முளைப்பா(வேறுபட்ட தானியங்களை ஒரு சாடியில் வளர்த்தல்) பதியம் போட்டு அவை வளர்ந்ததும் இறுதி நாளில் அதனைக் கடலில் போட்டுக்கரைப்பர்.அந்த இறுதி நாளில் இளம் பெண்கள் ஒரே மாதிரி சேலை அணிந்து கடற்கரையில் கும்மி கொட்டுவர்.இதனை வேடிக்கை பார்க்க ஆண்கள் வருவார்கள்.இந்நிகழ்வினால் அம்மனின் மனம் குளிர்வடைந்து நல்ல கணவனை அந்தப் பெண்கள் பெற்றுக் கொள்வார்கள் என்று அவ்வூரவர்கள் காரணம் கூறினாலும் இது கூட ஒருவகைச் சுயம்வரமோ என்று எனக்கு எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் இந்நிகழ்விலேயே அதிகமான ஆண்கள் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து கொள்கிறார்கள். பெண்களும்இந்நிகழ்வுக்கு செல்லும் போது வழக்கத்தை விட அதிகமாக நகையணிந்து பட்டு உடுத்தி ஒப்பனை செய்து கொள்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது கூட ஒரு பெண் பார்க்கும் படலம் தான்.
இங்குள்ள பெண்களுக்கு நகைகள் மீதும் உடைகள் மீதும் அதிக ஆசை.திருவிழாக்காலங்களில் கடன் பட்டேனும் உடைகளும் நகைகளும் வாங்கிவிடுவார்கள். சேமிப்பு பழக்கம் இவர்களிடம் இல்லாத ஒன்று. பணம் கிடைக்கும்போது அளவுக்கு மீறி ஆடம்பரமாகச் செலவழிப்பதும் பணம் இல்லாத போது நகைகளைஅடைவுக்கு வைத்தோ விற்றோ பணம் எடுப்பதும் இவர்கள் வழக்கம். வங்கியில்பணத்தை வைப்புச் செய்பவர்களை விரல்விட்டு எண்ணலாம்.மாதத்தில் ஒரு தடவையேனும் திரையரங்குகளுக்கு குடும்பமாகச் சென்று படம் பார்ப்பது இவர்கள் வழக்கம். இதற்காக பலர் சிலாபம் நகரிற்கு பேரூந்தில் சென்று படம் பார்ப்பார்கள்.
இங்குள்ள அரசியல் தமிழகத்து அரசியலைப் போன்றது. இவ்வூரைச் சேர்ந்தவர்கள் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளிற்கே ஆதரவு கொடுக்கிறார்கள்.இதனால் தொண்டர்களுக்கிடையே அடிதடி மோதல்களைத் தேர்தல் காலத்தில் காணக்கூடியதாய் இருக்கும்.இவ்வூரில் களவு கொலை போன்ற குற்றங்கள் நடப்பது இல்லை.ஆனால் தற்கொலை வீதம் இங்கு அதிகம் எனலாம். அதுவும் காதல் தோல்வியாலும் கணவன் மாமியார் கொடுமையினாலும் தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் அதிகம். ஆண்கள் குடித்து விட்டு மனைவியரை அடிப்பது பார்க்க கொடுமையாக இருக்கும். படிப்பறிவு இல்லாத காரணத்தால் இப்படியான வேறு பெண்ணை நாடிச்செல்லும் ஆண்களையும் கொடுமைப் படுத்தும் ஆண்களையும் சட்டத்தின்பிடியில் நிறுத்துவது இவர்களால் முடியாத செயல்.ஒரு சில பெண்கள் தண்டிப்பதாக நினைத்துக் கொண்டு கணவரைக் கத்தியால் வெட்டியகொடுமைகளைக் கேள்விப் பட்டதுண்டு. இவர்களின் இந்த முடிவினால் பாதிக்கப்படப் போகும் பிள்ளைகளை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.படிப்பறிவு இல்லாதமையால் உண்டான தன்னம்பிக்கையின்மையும்அவசரத்தில் எடுக்கும் முட்டாள் தனமான முடிவுகளுமே இவர்களின் இந்த நிலைக்கு காரணம். இந்நிலை மாறவேண்டுமானால் ஒரே வழி பெண்கள் படிக்கவேண்டும். ஆனால் "பெட்டை கழுதைக்கு படிப்பு என்னாத்திற்கு?கல்யாணம் கட்டினமா பிள்ளை பெத்தமா என்று இல்லாமல்" என்று கிராமத்துக் கிழவிகளே சொல்லும் போது எப்படி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது? தாங்கள் பிறந்ததன்நோக்கமே திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதுதான் என்று எனது தலைமுறைப் பெண்களே நினைப்பது வேதனை.இவற்றிலிருந்து விடுபட்டால் மட்டுமே இந்த ஊருக்கு விடுதலை. இவர்களுக்கு இப்போது வேண்டியது இனவிடுதலைஅல்ல.சமூக விடுதலை.
வீடு
" காணி நிலம் வேண்டும் பராசக்தி " என்ற பாரதியின் பாடல்வரிகள் தான் என் நினைவுக்கு வருகின்றன. சின்னவயதிலிருந்தே வீட்டுக்கான என் கனவு தொடங்கி விட்டது என நினைக்கிறேன். சரியாக 8 வயதிருக்கும், நான் என் சொந்த வீட்டை விட்டு இடம்பெயர்ந்து வாடகை வீடுகளுக்கும் உறவினர் வீடுகளுக்கும் குடிபெயர்ந்து அவர்கள் போடும் நிபந்தனைக்கெல்லாம் அடிபணிந்து, சீ என்ன வாழ்க்கை இது என்று புலம்பி, இடம்பெயர்ந்து போகும் இடங்களில் தங்க இடமில்லாமல் அலைக்கழிக்கப் பட்டு இப்படி 8 வயதிலிருந்தே வீட்டுக்கான என் கனவுகள் தொடங்கிவிட்டன. பெரிய மாளிகையெல்லாம் வேண்டாம். சொந்தமாக ஒரு சிறுகுடிசை. சும்மாவா சொன்னார்கள் எலி வளை என்றாலும் தனிவளை வேண்டும் என்று.
இப்பவும் எனக்கு நினைவிலிருக்கிறது. எனக்கு அப்போது 5 அல்லது 6 வயதிருக்கும். இந்திய அமைதிகாக்கும் படை என் நாட்டில் இருந்த காலப்பகுதி. நாங்கள் தங்கியிருந்த வீடு என் ஐயா என் அம்மாவுக்குச் சீதனமாகக் கொடுத்த பாரம்பரிய வீடு. என் அம்மம்மாவுக்கு அவரின் தாயார் கொடுத்த வீடாம். அதைப்பற்றி அம்மம்மா கதை கதையாகச் சொல்வார். என் அம்மம்மாவுக்கு 3 சகோதரிகள். அம்மம்மாவின் தந்தை அதாவது என் பூட்டனார் தன் பெண் குழந்தைகளுக்கு அந்தப் பெரியவீட்டை 4 பங்காகப் பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை சீதனமாக எழுதிவைத்தார். இவர்களுக்குத் திருமணமான புதிதில் 4 சகோதரிகளும் ஒரே வீட்டிலேயே கூட்டுக்குடித்தனம் நடாத்தினார்களாம். பின்னர் பிள்ளைகள் பிறக்கத்தொடங்க அம்மம்மாவின் சகோதரிகளில் இருவர் தங்கள் கணவர்மார் இருந்த ஊர்களில் புதிதாக வீட்டைக் கட்டிக்கொண்டு இந்தப் பழைய வீட்டின் பங்குகளை அம்மம்மாவுக்கு விற்றுவிட்டுப் போய்விட்டார்களாம். இருந்த பழைய வீட்டை ஐயா தன் உழைப்பால் செப்பனிட்டு புதிதாக வரவேற்பறை போட்டு அம்மாவின் திருமணத்தின் போது அதை அம்மாவுக்குச் சீதனமாகக் கொடுத்து விட்டார். அந்த வீட்டின் ஒவ்வொரு நிலையிலும் ஐயாவின் உழைப்பு மிளிர்வதாக அம்மா பெருமைப் பட்டுக்கொள்வார்.
இது பாரம்பரிய வீடு என்பதால் மேற்கத்து வீடுகளுக்கு உண்டான கவர்ச்சியோ அழகோ இந்த வீட்டுக் கிடையாது. வீட்டுக்கு முன்னால் ஒரு மல்லிகைப்பந்தல். இது என் அப்பாவின் கைவண்ணம். மாலை நேரங்களில் அந்த மல்லிகை மொட்டவிழத்தொடங்க அதன் சுகந்தத்தில் நாங்கள் மயங்கிப்போவோம். மல்லிகைப் பந்தலின் கீழ் கடற்கரை வெண்மணலைப் போட்டு நான் விளையாட அப்பா வசதி செய்திருந்தார். மாலை மங்கி இருட்டத்தொடங்கும் போது அம்மாவும் அப்பாவும் தோட்டத்தில் வேலை செய்து விட்டு களைத்து வருவார்கள். கூடவே எங்கள் மாடுகளும் ஆடுகளும் அவர்களோடு வரும். என்ன தான் புல் மேய்ந்தாலும் வீட்டிலிருக்கும் பூங்கன்றுகளைத் தின்பதில் இவைகளுக்கு பேரவா. அம்மா ஒருபுறம் கயிற்றில் கட்டியிருக்கும் மூக்கணங்கயிற்றைப் பற்றியிழுக்க மாடுகளோ மல்லிகைப்பந்தலை நோக்கி அம்மாவை இழுக்க அங்கோ ஒரு பெரிய போராட்டமே நடக்கும். நான் ஒரு சிறிய குச்சியை வைத்துக் கொண்டு கொய் கொய் என்று மாடுகளை மிரட்டமுயன்றாலும் அவை கேட்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பூங்கன்றின் கொப்பாவது அவற்றின் வயிற்றிற்கிரையாகிவிடும்.வீட்டின் முன் படலைக்கு அருகிலேயே ஒரு மருதாணி மரம். அவ்வப்போது அதன் இலைகளை அரைத்து கையில் பூசி சித்தி அழகு பார்ப்பார். மாடுகளுக்கு ஏனோ அந்த மரத்தைப் பிடிப்பதில்லை. அவை ஒருபோதும் அதனை உண்ண முற்பட்டதில்லை.
வீட்டுக்கு வந்ததும் அப்பாவும் அம்மாவும் குளிப்பார்கள். பின்னர் அம்மா முற்றத்தில் தண்ணீர் தெளிப்பார். அப்போது கிளம்பும் புழுதியின் மணம் எனக்கு பிடித்திருந்தது. வீட்டுத்திண்ணையில் தண்ணீரை ஊற்றிக் கழுவி விட்டு இருட்டியதும் அதில் தலை வைத்துப் படுத்திருந்து பிபிசி தமிழோசை கேட்போம். வெங்காயச் செய்கை காலங்களில் வீட்டின் ஓரத்திலிருக்கும் வெங்காயக் கொட்டில் வெங்காயப்பிடிகளால் நிறைந்திருக்கும். அம்மாவும் அம்மம்மாவும் உட்கார்ந்திருந்தபடி வெங்காயம் நுள்ளிக் கொண்டிருப்பார்கள். சிலவேளை சித்திமாரும் அவர்களோடு சேர்ந்து வெங்காயம் நுள்ளுவதுண்டு. அம்மம்மா ஐயா சித்தி, மாமாமாரோடு பக்கத்திலேயே 4 வீடுகள் தள்ளி ஒரு வீடு கட்டி அங்கு குடியிருந்தார்கள். நாங்கள் அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்குமாக மாறி மாறி ஓடியபடி இருப்போம்.
எங்கள் வீட்டுக்குக் கிணற்றில் துலா இருந்தது. துலாவில் தண்ணீர் இறைப்பதென்றால் எனக்குக் கொள்ளை ஆசை. ஆனால் எனக்குச் சின்ன வயதாக இருந்ததால் அம்மா என்னை அனுமதிப்பதில்லை.மின் வசதி இருந்த காலப்பகுதியிலும் துலாவில் தண்ணீர் இறைத்தே நாங்கள் வீட்டின் பின்னால் இருந்த எலுமிச்சை மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவோம். ஐயா கட்டியிருந்த புது வீட்டின் கிணற்றில் தண்ணீர் இறைப்பதானால் ஐயா துலா மிதிப்பதுண்டு. வாளிக்குப் பதிலாக பட்டை என்றழைக்கப்படும் பனையோலையாற் செய்யப்பட்ட கடகங்களை ஐயா பயன்படுத்துவார். இந்தப் பட்டைகளைச் செய்வதில் என் ஐயாவின் தந்தை அதாவது அப்பு கைதேர்ந்தவர். அவரின் கை வண்ணத்தில் விதவிதமான பட்டைகளை நேர்த்தியாகச் செதுக்கியிருப்பார்.
நாங்கள் ஊரில் இருந்தகாலப்பகுதியில் எங்கள் வீட்டை எங்களுக்குப் பிடிப்பதில்லை. காரணம் அது பழைய காலப்பாணியில் கட்டப் பட்டிருந்தது தான். மாரிகாலத்தில் பழையவீட்டிற்கும் புதிதாக ஐயா கட்டிய வரவேற்பறைக்கும் இடையிலிருந்த கூரைப்பகுதியில் இருந்த தகரம்( பீலி என்பார்கள்) துருப்பிடித்துப் போயிருந்தது. அதனால் அது ஒழுகத்தொடங்கும். அதிகமாக மழை கொட்டும் காலப்பகுதியில் வீட்டு வரவேற்பறைப் பகுதியில் தண்ணீர் ஆறாக ஓடும். நாட்டுப் பிரச்சனை சரியாகும் போது கூரையைச் சற்று உயர்த்தி இந்தத் தகரத்தை இல்லாமற் செய்து அந்தப்பகுதியில் முகட்டு ஓடுகளைப் போட்டு சரிசெய்யவேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.இதைத்தவிர வீட்டில் எந்தக் குறையையும் சொல்லமுடியாது. அளவுக்கு மீறியே அது பெரிதாக இருந்தது. எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அறைகள் இருக்குமளவிற்கு வீடு பெரிதாகவே இருந்தது. பல அறைகளைப் பாவிக்காமல் சும்மாவே வைத்திருந்தார்கள்.
1987 பகுதிகளில் நாங்கள் இடம்பெயர்ந்து யாழ் நகர்ப்பகுதிக்கும் பின்னர் வன்னியில் நட்டாங்கண்டுப் பகுதிக்கும் இடம்பெயர்ந்து சிறிது காலம் வாழ்ந்தோம். இந்திய அமைதிப்படை எங்களூரை விட்டு போனதும் மறுபடி அங்கு குடிபோனோம். சிறிது பற்றை மண்டிப்போயிருந்த வளவையும் இருண்டு போயிருந்த வீட்டையும் சீராக்க ஒருவாரம் எடுத்தது. இருந்தாலும் ஊரில் பழைய கலகலப்பும் அமைதியும் திரும்பியிருந்தது. அமைதிப்படை இருந்த காலத்தில் காணாமல் போன அமைதி அவர்கள் போனதும் மீண்டு வந்திருந்தது. எனக்குத் தெரிந்த ஓரிரு சொந்தங்களும் உறவினர்களும் வீடுகளில் படங்களில் மாலைகளோடு தொங்கிக் கொண்டிருந்தது மனவேதனையைத் தந்தாலும் ஊர் தன் பழைய நிலைக்கு வேகமாகத் திரும்பிக் கொண்டிருந்தது.89 தொடக்கம் 91 காலப்பகுதியில் அடிக்கடி இடப்பெயர்வுகள் நடந்தன. ஊருக்குள் இராணுவத்தினர் வரும் போது எங்கள் ஒரு சில உடைமைகளோடு ஊரை விட்டுப் போவதும் இராணுவத்தினர் பின் வாங்கும் போது மறுபடியும் ஊர் திரும்புவதுமாக 2 ஆண்டுகள் போனது. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஊரை விட்டுப் போகும் போதும் எனது வீட்டை மறுபடியும் பார்ப்பேன் என்ற நம்பிக்கையோடு விடை பெறுவோம். 91 மார்கழியில் அந்த நம்பிக்கை உடைந்து போனது. இனி ஊருக்கே போகமுடியாது. அங்கு வாழ்வது ஆபத்தானது, எங்கள் காணி நிலங்களில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளோடு எம்மால் வாழ முடியாது என்ற நிலை தோன்றியபோது நாங்கள் முழுவதுமாக உடைந்து போனோம்.
சரியாக 8 வயதில் என் வாடகை வீட்டுக் குடித்தனம் தொடங்கியது.ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகள். சில ஊர்களில் கிணறுகள் பொதுவானதாகத்தான் இருக்கும். மற்றவர்கள் இல்லாத நேரங்களில் போய் நாங்கள் குளித்துவிட்டு வரவேண்டும். முற்றத்தில் மரம் நடாதே, வீட்டில் ஆணி அடிக்காதே, விரத நாட்களில் மீன் சமைக்கக் கூடாது, ஆடு மாடுகள் அறவே கூடாது இப்படியெல்லாம் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள். ஒவ்வொரு ஆண்டும் இடம்பெயர்வுகளும் அலைக்கழிவுகளும் என பலவீடுகளுக்குத் தாவினோம். சில வீடுகள் மாளிகை போல் இருந்தன. சில வீடுகள் சிறிதாக இருந்தன. சிலவீடுகள் மேற்கத்துப் பாணியில் கட்டப்பட்டிருந்தன. ஆனால் எந்த வீட்டிலும் எங்கள் பழைய வீட்டில் இருந்த மகிழ்ச்சி இருக்கவில்லை.
ஊரில் எங்கள் உறவினர் ஒருவரின் வீட்டை அமைதிப்படை அமைதியான ஒரிரவில் எரிகுண்டு வீசி எரித்தது. அந்த வீட்டின் கரிபடிந்து போன பழைய நிலைகளைப் பார்த்து நான் வருந்துவேன். அப்போதெல்லாம் என் தம்பி சொல்வான் "அந்த வீட்டை எரித்ததற்குப் பதிலாக எங்கள் வீட்டை எரித்திருக்கலாம் ". ஏனடா என்று கேட்டால், " இல்லை இந்த வீடு பழைய வீடுதானே. இதை எரித்தால் நாங்கள் புதிதாக கண்ணாடி போல் வீடுகட்டலாம் " என்பான். இப்போது இந்தக் கனடா நாட்டில் தொடர்மாடிக்குடியிருப்புகளில் வாடகைக்குக் குடியிருக்கும் போது எங்கள் சொந்த வீட்டின் வாசனை மீண்டும் கிடைக்காதா என்று மனம் ஏங்குகிறது. இந்த நாட்டில் வீடு வாங்குவதென்றால் அது இப்போதைக்கு முடியாத காரியம். படிப்புக்கான செலவுகள், மருத்துவச் செலவு, வாகனக்காப்புறுதி என உழைக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவாகின்றது. படித்து முடிந்து வேலை கிடைக்கும் வரை என் வீட்டுக்கான கனவுகளுக்கு விடை கொடுக்கவேண்டியது தான். நான் வீடுகட்டினால் அதற்குத் தாயகம் என்று பெயர் வைப்பதாக இருக்கிறேன். தாயகத்திலுள்ள என் வீட்டில் நான் இறப்பதற்கு முன் ஒரே நாள் ஒரே ஒருநாள் வாழவேண்டும். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்குமோ தெரியாது. கால ஓட்டத்தில் என் வீடு உடைந்து போகலாம் அல்லது காணாமற் கூடப் போகலாம். ஆனால் எதிர்காலத்தில் நாங்கள் கட்டியமைக்கப் போகும் என் தாயகத்தில் நான் குடியிருப்பேன் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது. அட, வீட்டைத் தான் சொல்கிறேன். நம்புங்கள்.
இப்பவும் எனக்கு நினைவிலிருக்கிறது. எனக்கு அப்போது 5 அல்லது 6 வயதிருக்கும். இந்திய அமைதிகாக்கும் படை என் நாட்டில் இருந்த காலப்பகுதி. நாங்கள் தங்கியிருந்த வீடு என் ஐயா என் அம்மாவுக்குச் சீதனமாகக் கொடுத்த பாரம்பரிய வீடு. என் அம்மம்மாவுக்கு அவரின் தாயார் கொடுத்த வீடாம். அதைப்பற்றி அம்மம்மா கதை கதையாகச் சொல்வார். என் அம்மம்மாவுக்கு 3 சகோதரிகள். அம்மம்மாவின் தந்தை அதாவது என் பூட்டனார் தன் பெண் குழந்தைகளுக்கு அந்தப் பெரியவீட்டை 4 பங்காகப் பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை சீதனமாக எழுதிவைத்தார். இவர்களுக்குத் திருமணமான புதிதில் 4 சகோதரிகளும் ஒரே வீட்டிலேயே கூட்டுக்குடித்தனம் நடாத்தினார்களாம். பின்னர் பிள்ளைகள் பிறக்கத்தொடங்க அம்மம்மாவின் சகோதரிகளில் இருவர் தங்கள் கணவர்மார் இருந்த ஊர்களில் புதிதாக வீட்டைக் கட்டிக்கொண்டு இந்தப் பழைய வீட்டின் பங்குகளை அம்மம்மாவுக்கு விற்றுவிட்டுப் போய்விட்டார்களாம். இருந்த பழைய வீட்டை ஐயா தன் உழைப்பால் செப்பனிட்டு புதிதாக வரவேற்பறை போட்டு அம்மாவின் திருமணத்தின் போது அதை அம்மாவுக்குச் சீதனமாகக் கொடுத்து விட்டார். அந்த வீட்டின் ஒவ்வொரு நிலையிலும் ஐயாவின் உழைப்பு மிளிர்வதாக அம்மா பெருமைப் பட்டுக்கொள்வார்.
இது பாரம்பரிய வீடு என்பதால் மேற்கத்து வீடுகளுக்கு உண்டான கவர்ச்சியோ அழகோ இந்த வீட்டுக் கிடையாது. வீட்டுக்கு முன்னால் ஒரு மல்லிகைப்பந்தல். இது என் அப்பாவின் கைவண்ணம். மாலை நேரங்களில் அந்த மல்லிகை மொட்டவிழத்தொடங்க அதன் சுகந்தத்தில் நாங்கள் மயங்கிப்போவோம். மல்லிகைப் பந்தலின் கீழ் கடற்கரை வெண்மணலைப் போட்டு நான் விளையாட அப்பா வசதி செய்திருந்தார். மாலை மங்கி இருட்டத்தொடங்கும் போது அம்மாவும் அப்பாவும் தோட்டத்தில் வேலை செய்து விட்டு களைத்து வருவார்கள். கூடவே எங்கள் மாடுகளும் ஆடுகளும் அவர்களோடு வரும். என்ன தான் புல் மேய்ந்தாலும் வீட்டிலிருக்கும் பூங்கன்றுகளைத் தின்பதில் இவைகளுக்கு பேரவா. அம்மா ஒருபுறம் கயிற்றில் கட்டியிருக்கும் மூக்கணங்கயிற்றைப் பற்றியிழுக்க மாடுகளோ மல்லிகைப்பந்தலை நோக்கி அம்மாவை இழுக்க அங்கோ ஒரு பெரிய போராட்டமே நடக்கும். நான் ஒரு சிறிய குச்சியை வைத்துக் கொண்டு கொய் கொய் என்று மாடுகளை மிரட்டமுயன்றாலும் அவை கேட்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பூங்கன்றின் கொப்பாவது அவற்றின் வயிற்றிற்கிரையாகிவிடும்.வீட்டின் முன் படலைக்கு அருகிலேயே ஒரு மருதாணி மரம். அவ்வப்போது அதன் இலைகளை அரைத்து கையில் பூசி சித்தி அழகு பார்ப்பார். மாடுகளுக்கு ஏனோ அந்த மரத்தைப் பிடிப்பதில்லை. அவை ஒருபோதும் அதனை உண்ண முற்பட்டதில்லை.
வீட்டுக்கு வந்ததும் அப்பாவும் அம்மாவும் குளிப்பார்கள். பின்னர் அம்மா முற்றத்தில் தண்ணீர் தெளிப்பார். அப்போது கிளம்பும் புழுதியின் மணம் எனக்கு பிடித்திருந்தது. வீட்டுத்திண்ணையில் தண்ணீரை ஊற்றிக் கழுவி விட்டு இருட்டியதும் அதில் தலை வைத்துப் படுத்திருந்து பிபிசி தமிழோசை கேட்போம். வெங்காயச் செய்கை காலங்களில் வீட்டின் ஓரத்திலிருக்கும் வெங்காயக் கொட்டில் வெங்காயப்பிடிகளால் நிறைந்திருக்கும். அம்மாவும் அம்மம்மாவும் உட்கார்ந்திருந்தபடி வெங்காயம் நுள்ளிக் கொண்டிருப்பார்கள். சிலவேளை சித்திமாரும் அவர்களோடு சேர்ந்து வெங்காயம் நுள்ளுவதுண்டு. அம்மம்மா ஐயா சித்தி, மாமாமாரோடு பக்கத்திலேயே 4 வீடுகள் தள்ளி ஒரு வீடு கட்டி அங்கு குடியிருந்தார்கள். நாங்கள் அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்குமாக மாறி மாறி ஓடியபடி இருப்போம்.
எங்கள் வீட்டுக்குக் கிணற்றில் துலா இருந்தது. துலாவில் தண்ணீர் இறைப்பதென்றால் எனக்குக் கொள்ளை ஆசை. ஆனால் எனக்குச் சின்ன வயதாக இருந்ததால் அம்மா என்னை அனுமதிப்பதில்லை.மின் வசதி இருந்த காலப்பகுதியிலும் துலாவில் தண்ணீர் இறைத்தே நாங்கள் வீட்டின் பின்னால் இருந்த எலுமிச்சை மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவோம். ஐயா கட்டியிருந்த புது வீட்டின் கிணற்றில் தண்ணீர் இறைப்பதானால் ஐயா துலா மிதிப்பதுண்டு. வாளிக்குப் பதிலாக பட்டை என்றழைக்கப்படும் பனையோலையாற் செய்யப்பட்ட கடகங்களை ஐயா பயன்படுத்துவார். இந்தப் பட்டைகளைச் செய்வதில் என் ஐயாவின் தந்தை அதாவது அப்பு கைதேர்ந்தவர். அவரின் கை வண்ணத்தில் விதவிதமான பட்டைகளை நேர்த்தியாகச் செதுக்கியிருப்பார்.
நாங்கள் ஊரில் இருந்தகாலப்பகுதியில் எங்கள் வீட்டை எங்களுக்குப் பிடிப்பதில்லை. காரணம் அது பழைய காலப்பாணியில் கட்டப் பட்டிருந்தது தான். மாரிகாலத்தில் பழையவீட்டிற்கும் புதிதாக ஐயா கட்டிய வரவேற்பறைக்கும் இடையிலிருந்த கூரைப்பகுதியில் இருந்த தகரம்( பீலி என்பார்கள்) துருப்பிடித்துப் போயிருந்தது. அதனால் அது ஒழுகத்தொடங்கும். அதிகமாக மழை கொட்டும் காலப்பகுதியில் வீட்டு வரவேற்பறைப் பகுதியில் தண்ணீர் ஆறாக ஓடும். நாட்டுப் பிரச்சனை சரியாகும் போது கூரையைச் சற்று உயர்த்தி இந்தத் தகரத்தை இல்லாமற் செய்து அந்தப்பகுதியில் முகட்டு ஓடுகளைப் போட்டு சரிசெய்யவேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.இதைத்தவிர வீட்டில் எந்தக் குறையையும் சொல்லமுடியாது. அளவுக்கு மீறியே அது பெரிதாக இருந்தது. எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அறைகள் இருக்குமளவிற்கு வீடு பெரிதாகவே இருந்தது. பல அறைகளைப் பாவிக்காமல் சும்மாவே வைத்திருந்தார்கள்.
1987 பகுதிகளில் நாங்கள் இடம்பெயர்ந்து யாழ் நகர்ப்பகுதிக்கும் பின்னர் வன்னியில் நட்டாங்கண்டுப் பகுதிக்கும் இடம்பெயர்ந்து சிறிது காலம் வாழ்ந்தோம். இந்திய அமைதிப்படை எங்களூரை விட்டு போனதும் மறுபடி அங்கு குடிபோனோம். சிறிது பற்றை மண்டிப்போயிருந்த வளவையும் இருண்டு போயிருந்த வீட்டையும் சீராக்க ஒருவாரம் எடுத்தது. இருந்தாலும் ஊரில் பழைய கலகலப்பும் அமைதியும் திரும்பியிருந்தது. அமைதிப்படை இருந்த காலத்தில் காணாமல் போன அமைதி அவர்கள் போனதும் மீண்டு வந்திருந்தது. எனக்குத் தெரிந்த ஓரிரு சொந்தங்களும் உறவினர்களும் வீடுகளில் படங்களில் மாலைகளோடு தொங்கிக் கொண்டிருந்தது மனவேதனையைத் தந்தாலும் ஊர் தன் பழைய நிலைக்கு வேகமாகத் திரும்பிக் கொண்டிருந்தது.89 தொடக்கம் 91 காலப்பகுதியில் அடிக்கடி இடப்பெயர்வுகள் நடந்தன. ஊருக்குள் இராணுவத்தினர் வரும் போது எங்கள் ஒரு சில உடைமைகளோடு ஊரை விட்டுப் போவதும் இராணுவத்தினர் பின் வாங்கும் போது மறுபடியும் ஊர் திரும்புவதுமாக 2 ஆண்டுகள் போனது. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஊரை விட்டுப் போகும் போதும் எனது வீட்டை மறுபடியும் பார்ப்பேன் என்ற நம்பிக்கையோடு விடை பெறுவோம். 91 மார்கழியில் அந்த நம்பிக்கை உடைந்து போனது. இனி ஊருக்கே போகமுடியாது. அங்கு வாழ்வது ஆபத்தானது, எங்கள் காணி நிலங்களில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளோடு எம்மால் வாழ முடியாது என்ற நிலை தோன்றியபோது நாங்கள் முழுவதுமாக உடைந்து போனோம்.
சரியாக 8 வயதில் என் வாடகை வீட்டுக் குடித்தனம் தொடங்கியது.ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகள். சில ஊர்களில் கிணறுகள் பொதுவானதாகத்தான் இருக்கும். மற்றவர்கள் இல்லாத நேரங்களில் போய் நாங்கள் குளித்துவிட்டு வரவேண்டும். முற்றத்தில் மரம் நடாதே, வீட்டில் ஆணி அடிக்காதே, விரத நாட்களில் மீன் சமைக்கக் கூடாது, ஆடு மாடுகள் அறவே கூடாது இப்படியெல்லாம் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள். ஒவ்வொரு ஆண்டும் இடம்பெயர்வுகளும் அலைக்கழிவுகளும் என பலவீடுகளுக்குத் தாவினோம். சில வீடுகள் மாளிகை போல் இருந்தன. சில வீடுகள் சிறிதாக இருந்தன. சிலவீடுகள் மேற்கத்துப் பாணியில் கட்டப்பட்டிருந்தன. ஆனால் எந்த வீட்டிலும் எங்கள் பழைய வீட்டில் இருந்த மகிழ்ச்சி இருக்கவில்லை.
ஊரில் எங்கள் உறவினர் ஒருவரின் வீட்டை அமைதிப்படை அமைதியான ஒரிரவில் எரிகுண்டு வீசி எரித்தது. அந்த வீட்டின் கரிபடிந்து போன பழைய நிலைகளைப் பார்த்து நான் வருந்துவேன். அப்போதெல்லாம் என் தம்பி சொல்வான் "அந்த வீட்டை எரித்ததற்குப் பதிலாக எங்கள் வீட்டை எரித்திருக்கலாம் ". ஏனடா என்று கேட்டால், " இல்லை இந்த வீடு பழைய வீடுதானே. இதை எரித்தால் நாங்கள் புதிதாக கண்ணாடி போல் வீடுகட்டலாம் " என்பான். இப்போது இந்தக் கனடா நாட்டில் தொடர்மாடிக்குடியிருப்புகளில் வாடகைக்குக் குடியிருக்கும் போது எங்கள் சொந்த வீட்டின் வாசனை மீண்டும் கிடைக்காதா என்று மனம் ஏங்குகிறது. இந்த நாட்டில் வீடு வாங்குவதென்றால் அது இப்போதைக்கு முடியாத காரியம். படிப்புக்கான செலவுகள், மருத்துவச் செலவு, வாகனக்காப்புறுதி என உழைக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவாகின்றது. படித்து முடிந்து வேலை கிடைக்கும் வரை என் வீட்டுக்கான கனவுகளுக்கு விடை கொடுக்கவேண்டியது தான். நான் வீடுகட்டினால் அதற்குத் தாயகம் என்று பெயர் வைப்பதாக இருக்கிறேன். தாயகத்திலுள்ள என் வீட்டில் நான் இறப்பதற்கு முன் ஒரே நாள் ஒரே ஒருநாள் வாழவேண்டும். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்குமோ தெரியாது. கால ஓட்டத்தில் என் வீடு உடைந்து போகலாம் அல்லது காணாமற் கூடப் போகலாம். ஆனால் எதிர்காலத்தில் நாங்கள் கட்டியமைக்கப் போகும் என் தாயகத்தில் நான் குடியிருப்பேன் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது. அட, வீட்டைத் தான் சொல்கிறேன். நம்புங்கள்.
Subscribe to:
Posts (Atom)
