Saturday, November 25, 2006

மெல்லத்தமிழ் இனிச் சாகுமா?

நிலைக்குமா தமிழ் இந்நாட்டில்..?
மெல்லத்தமிழ் இனிச் சாகும் - எனச்
சொல்லி வைத்த எம் பாரதியே- கனடாவில்
மெல்லத் தமிழ் இனிச் சாகும்
ஆரியரும் பின் வந்த அந்நியரும்
அடிமைப்படுத்த முடியாத எம் மொழியை- கனடா
காளையரும் கன்னியரும்
கழுத்தறுக்கும் நிலை பாரம்மா..
நுனி நாக்கு ஆங்கிலமும்- வாயில்
நுழையாத பிரெஞ்சும்- இங்கு
தனியாட்சி நடாத்துதம்மா- நம்
தமிழ் இங்கு சாகுதம்மா
மெல்லத்தமிழ் இனிச்சாகும்.......
பாரதியும் பின்வந்த பாரதிதாசனும்
கம்பனும் கண்ணதாசனும்
பாடிய எம் தமிழ்- இன்று
வீடிழந்து போகலாமா?
ஆயிரம் அறிவுமதிகளும்
அண்ணன் காசியானந்தனும்
போற்றும் எம் தாய்மொழி- இங்கு
போக்கற்றுப் போகலாமா?
புரட்சிக் கவி புதுவையும்
புலித்தலைவன் பிரபாவும்
சொத்தெனப் போற்றும் என் தாய்மொழி- இன்று
செத்து விழலாமா?
ஓ! தமிழ்க் குடிமகனே - இங்கு
தமிழ் நிலையைப் பாரடா - உன்
தனித் தமிழ் முயற்சியால்- இத்
தலைவிதியை மாற்றடா
ஆக்கமிகு வேலைத்திட்டம்
ஆயிரம் நீ தீட்டடா
பூக்கும் தனித்தமிழீழத்தில்- அதன்
புகழை நிலை நாட்டடா
பாட்டுக்கொரு தலைவன்
பாரதி போல் வாழடா- நீ
போற்றும் பெண் தமிழைப்
பொன் போல பாரடா
வாட்டமுறும் போது- திரு
வள்ளுவனைப் பாரடா- வாழ்க்கையில்
ஓட்டம் பல கண்டாலும்- தமிழில்
நாட்டம் நீ காட்டடா

No comments: